உள்ளூர் செய்திகள் (District)
பைக் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலி
- வெள்ளக்கோவிலுக்கு சென்றுபோது விபரீதம்
- பைக் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலியானார்
கரூர்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த கொடிங்கால்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி (வயது23). இவர் வெள்ளக்கோவிலில் சலுான் கடை நடத்தி வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் அண்ணன் ராஜராஜனை பின்னால் அமர வைத்து வெள்ளக்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் சித்தலவாய் கடை வீதி அருகே சென்றபோது பின்னால் வந்த டிப்பர் டிராக்டர் பைக் மீது மோதியது. இதில் தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் ராஜராஜன் டிராக்டர் பின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். பின்னர் அவரை கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இவரை பரிசோதித்த மருத்துவர் ராஜராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து மாயனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணிக்கம்பட்டி டிராக்டர் டிரைவர் முருகேசனிடம் (48) விசாரணை நடத்தி வருகின்றனர்.