உள்ளூர் செய்திகள் (District)
ஆசிரியையிடம் பணம் பறிக்க முயன்ற பெண் கைது
- ஆசிரியையிடம் பணம் பறிக்க முயன்ற பெண் கைது செய்யபட்டார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர்,
கரூர் மாவட்டம் நஞ்சைபுகளூரைச் சேர்ந்தவர் நிர்மலா (வயது 40). இவர் காட்டம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஆசிரியை நிர்மலா கரூர் பேருந்து நிலையத்தின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு பெண் ஆசிரியை பர்சில் இருந்த ஆயிரம் ரூபாயை எடுக்க முயன்றுள்ளார். இதனை பார்த்து ஆசிரியை சத்தம் போடவும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து திருட முயன்ற பெண்னை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்ட அந்த பெண் சேலத்தை சேர்ந்த கவிதா(45) என்பது தெரியவந்தது. இதையடுத்து கவிதாவை கைது செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.