உள்ளூர் செய்திகள்

டெக்ஸ்டைல் நிறுவன ஊழியர் மாயம்

Published On 2022-06-05 09:57 GMT   |   Update On 2022-06-05 10:18 GMT
கரூரில் டெக்ஸ்டைல் நிறுவன ஊழியர் மாயமானார்.

கரூர்:

கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் முத் தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகன் பிரபாகரன் (29)

டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 27-ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார் .

பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து அவரது உறவினர் சகுந்தலா பசுபதிபளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News