உள்ளூர் செய்திகள் (District)

பொள்ளாச்சி அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி திருமணம்

Published On 2022-06-24 10:16 GMT   |   Update On 2022-06-24 10:16 GMT
  • மாணவிக்கும், மானூரை சேர்ந்த மணிகண்டன் ( வயது 29) என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
  • இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவியை கண்டித்தனர்.

கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன்முத்தூரை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

அப்போது மாணவிக்கும், மானூரை சேர்ந்த மணிகண்டன் ( வயது 29) என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவியை கண்டித்தனர்.

இந்தநிலையில் மணிகண்டன் மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்வது என முடிவு செய்தார். அதன்படி தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து மாணவியை கடத்தினார்.

பின்னர் பொன்மாலை யூரில் உள்ள விநாயகர் கோவில் வைத்து மாணவியை திருமணம் செய்தார். இது குறித்து மாணவியின் பெற்றோர் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாணவியை மீட்டனர்.

பின்னர் அவரை திருமணம் செய்த மணிக ண்டன், அவரது நண்பர்கள் ராமாபட்டிணத்தை சேர்ந்த சின்னராஜ் (30), பொன்ராஜ் (27) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

Tags:    

Similar News