உள்ளூர் செய்திகள் (District)
- சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடியை சேர்ந்த பள்ளி மாணவியை கடந்த 2 நாட்களாக காணவில்லை என பெற்றோர்கள் போலீசில் புகார்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடியை சேர்ந்த பள்ளி மாணவியை கடந்த 2 நாட்களாக காணவில்லை. இதனால் பதறிபோன மாணவியின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடிபார்த்தனர்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தாரமங்கலம் போலீசில் மாணவியை அதே பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் விக்னேஷ் (வயது23) என்பவர் கடத்தி சென்றுவிட்டதாக சந்தேகத்தின் பேரில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.