உள்ளூர் செய்திகள் (District)
- தாரமங்கலம் அருகிலுள்ள பள்ளி மாணவியை கடத்தி சென்றுவிட்டதாக பெற்றோர் தாரமங்கலம் போலீசில் புகார் செய்தனர்.
- வாலிபர் மீது போலீசில் புகார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடியை சேர்ந்த பள்ளி மாணவியை கடந்த 2 நாட்களாக காணவில்லை. அந்த மாணவியை அதே பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் விக்னேஷ் (வயது23) என்பவர் கடத்தி சென்றுவிட்டதாக பெற்றோர் தாரமங்கலம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .