உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் பட்டாசு கடைகளில் விதி மீறல்; ரூ.10 ஆயிரம் அபராதம்

Published On 2022-10-22 09:28 GMT   |   Update On 2022-10-22 09:28 GMT
  • பட்டாசு கடைகளில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) வெங்கடாசலபதி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், சேலம் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ் ஆகியோர் அறிவு ரையின்படி, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் எனது தலைமையில் பட்டாசு கடைகளில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, சட்டமுறை எடையளவு 2009 மற்றும் பொட்டலப் பொருள் விதிகள் 2011-ன்படி விற்பனை செய்யும் பட்டாசுகளில் உரிய அறிவிப்புகள் இல்லாதது குறித்தும், அதிகப்பட்ச சில்லரை விற்பனை விட கூடுதலாக விற்பனை செய்தல் குறித்தும், தரப்படுத்தப்படாத அலகில் அறிவிப்பு விலைப்பட்டியல் குறித்தும், கிருஷ்ணகிரி, தருமபுரி , அரூர் மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளில் உள்ள 33 பட்டாசு கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

இதில், 2 கடைகளில் விதிகள் மீறப்பட்டது தெரிந்தது. அக்கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News