உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் 2 வாகனங்கள் ஏலம்

Published On 2022-12-11 09:29 GMT   |   Update On 2022-12-11 09:29 GMT
  • கால்நடை பராமரிப்புத்துறை வாகனம் மற்றும் நடமாடும் கால்நடை மருந்தக பிரிவு வாகனம் ஆகிய இரு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டுள்ளது.
  • கால்நடை மருந்தக வளாகத்தில் உள்ள உதவி இயக்குநர்அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் இரண்டு வாகனங்கள் ஏலம்விடப்படவுள்ளது.இது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

கிருஷ்ணகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் கட்டுப்பாட்டிலுள்ள கிருஷ்ணகிரி உதவி இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை வாகனம் மற்றும் நடமாடும் கால்நடை மருந்தக பிரிவு வாகனம் ஆகிய இரு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டுள்ளது.

கழிவுசெய்யப்பட்டுள்ள இரு வாகனங்களும் வருகிற 21-ந் தேதி மாலை 3மணியளவில் கிருஷ்ணகிரிபழைய பெங்களூர் சலையில் உள்ள கால்நடை மருந்தக வளாகத்தில் உள்ள உதவி இயக்குநர்அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது.

மேற்படி பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்துகொண்டு, விலைப்புள்ளியை கோரலாம். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News