குலசேகரன்பட்டினம் வீர மனோகரி அம்மன் கோவில் சித்திரை திருவிழா - 14 -ந் தேதி தொடங்குகிறது
- குலசேகரன்பட்டினம் வீரமனோகரி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- தொடர்ந்து கொடிமரத்துக்கு சந்தனம் உட்பட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெறும்.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் வீரமனோகரி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் வடக்கூர் வீர மனோ கரிஅம்மன் கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் வருடம் தோறும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டா டப்படும். இந்த ஆண்டு திருவிழா வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு தொடங்குகிறது. தொடர்ந்து கொடி மரத்துக்கு சந்தனம், பன்னீர், குங்குமம் ,விபூதி, இளநீர் உட்பட பல்வேறு வகையான அபிஷே கங்களும், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெறும்.
திருவிழா தொடங்கியதை யொட்டி தினசரி காலை யிலும், மாலையிலும் சுவாமி எழுந்தருளி தெருவீதி உலா வருகின்ற நிகழ்ச்சியும், 10-ம் திருநாளான 23-ந் தேதி அன்று திருவிழா நிறைவு பூஜை நடைபெறும். திருவிழா வில் ஆயிர க்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் வீரபாகு வல்லவராயர் செய்து வருகிறார்.