உள்ளூர் செய்திகள் (District)

திருத்துறைப்பூண்டி சுவேதவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா

Published On 2023-09-11 09:49 GMT   |   Update On 2023-09-11 10:31 GMT
  • கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், நவக்கிர ஹோமங்களுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
  • ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி- வேதை சாலை தச்சன்கு ளத்தில் உள்ள சுவேதவிநா யகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 8-ந் தேதி கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், நவக்கிர ஹோமங்களுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

தொடர்ந்து, நேற்று காலை 6-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து, மேளதாளங்கள் முழங்க புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிவாச்சாரியார்கள் கோபுரகலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவில் பாரதிதாசன் பாரதியார் தெருமக்கள், மகேஸ்வரன், ராமு ஐயப்பன் செந்தில், கோவில் நிர்வாகிகள், கருணாநிதி ஓம் சக்தி கண்ணன், செயல் அலுவலர் முருகையன் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News