உள்ளூர் செய்திகள்

திறனாய்வு தேர்வில் சிறப்பிடம் பிடித்த பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தேசிய திறனாய்வு தேர்வில் சிறப்பிடம் பிடித்த குரவப்புலம் பள்ளி மாணவர்கள்

Published On 2023-04-23 10:02 GMT   |   Update On 2023-04-23 10:02 GMT
  • குரவப்புலம் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதல் 2 இடங்களை பிடித்தனர்.
  • தேர்வில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

வேதாரண்யம்:

தேசிய வருவாய் வாரியான திறனாய்வு தேர்வில் வேதாரண்யம் அடுத்த குரவப்புலம் சீதாலெட்சுமி உயர்நி லைப்பள்ளி மாணவர்கள் விஸ்வபாலா 123/180 மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்தில் முதலிடமும், ஆகாஷ் 119/180 மதிப்பெண்கள் எடுத்து 2-ம் இடமும் பிடித்தனர்.

மேலும், சஞ்சய், ஈஸ்வரன், மணியரசன், காவியா, கீர்த்தனா உள்ளிட்ட மாணவ- மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

மேலும், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வில் சீதாலட்சுமி, பத்மஸ்ரீ, பவித்ரா, அர்ஜித், அற்புதம், ஜெயசுதன் ஆகிய மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வில் வெற்றிபெற்ற மாணவ மாணவ- மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் பள்ளி செயலாளர் கிரிதரன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் பப்பிதாபானு, சீதாலெட்சுமி உதவி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கருணாநிதி மற்றும் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News