உள்ளூர் செய்திகள் (District)

நெல்லை அருகே இன்று அதிகாலை பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி கூலித்தொழிலாளி சாவு

Published On 2023-06-07 09:04 GMT   |   Update On 2023-06-07 09:06 GMT
  • இன்று அதிகாலை 4.30 மணிக்கு பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு நடுக்கல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது.
  • ஒருவர் எதிர்பாராத விதமாகரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

நெல்லை:

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு பாலருவி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 4.30 மணிக்கு பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு பேட்டையை அடுத்த நடுக்கல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஒருவர் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையடுத்து அப்பகுதியில் உள்ளவர்கள் சுத்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள், பலியானவர் பற்றி விசாரணை நடத்தினர்.

அதில் பலியானவர் நடுக்கல்லூர் ரெயில்வேபீடர் ரோட்டை சேர்ந்த பகவதி (வயது 40) என்பது தெரியவந்தது. கூலி வேலை செய்து வந்த இவருக்கு சொர்ணம் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. பகவதி இன்று காலை இயற்கை உபாதையை கழிக்க அங்கு சென்றிருக்கலாம் என்றும், அப்போது எதிர்பாராத விதமாக ரெயிலில் மோதி இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து சந்திப்பு ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News