உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு கேடயம் வழங்கிய காட்சி.

10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வில் லெட்சுமிராமன் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

Published On 2022-06-21 10:06 GMT   |   Update On 2022-06-21 10:06 GMT
  • பிளஸ்-2 தேர்வில் மாணவி மதிஷா 581 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தை பெற்றார்.
  • 10-ம்வகுப்பு தேர்வில் மாணவன் ஹரிஷ் சண்முகம் 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம்.

நெல்லை:

பாளை.உத்தம பாண்டியன்குளம் லெட்சுமி ராமன் நகரில் உள்ள லெட்சுமி ராமன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடந்து முடிந்த பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.

பிளஸ்-2 தேர்வில் மாணவி மதிஷா 581 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், சுவேதா 576 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தையும், மாணவி ரம்யா 572 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

சுவேதா கணக்குப் பதிவியல், வணிகவியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றார்.

10-ம்வகுப்பு தேர்வில் மாணவன் ஹரிஷ் சண்முகம் 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், வைகுண்டபெருமாள் 490 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தையும், பாலமுருகன் 484 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

கணிதம், அறிவியல் பாடங்களில் ஹரிஷ் சண்முகம் 100-க்கு 100 மதிப்பெண்களும் , வைகுண்டபெருமாள் கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களை தாளாளர் எஸ்.ஆர்.அனந்தராமன் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

நிர்வாக இயக்குனர் எஸ்.ஏ.ராஜ்குமார், மேலாண்மை இயக்குனர் எஸ்.ஏ.சுரேஷ்குமார், லெட்சுமிராமன் அறக்கட்டளை நிர்வாகிகள் தீபா ராஜ்குமார், ராஜேஸ்வரி சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி முதல்வர் இந்துமதி, துணை முதல்வர் சாந்தி மற்றும் ஆசிரிய- ஆசியர்கள் மாணவர்களை பாராட்டினர்.

Tags:    

Similar News