உள்ளூர் செய்திகள்
ஓவேலி பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடக்கம்
பாலவாடி, காந்திநகா், பாரதி நகா், ஆரூட்டுப்பாறை, எல்லமலை ஆகிய பகுதிகளில் தூய்மை குறித்த விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடா்ந்து மக்கும் குப்பை, மக்கா குப்பை குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், ஓவேலி பேரூராட்சியில் உள்ள பாலவாடி, காந்திநகா், பாரதி நகா், ஆரூட்டுப்பாறை, எல்லமலை ஆகிய பகுதிகளில் தூய்மை குறித்த விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடா்ந்து மக்கும் குப்பை, மக்கா குப்பை குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் சித்ரா தேவி தலைமை வகித்தாா்.துணைத் தலைவா் க.சகாதேவன், செயல் அலுவலா் சி.ஹரிதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்