உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சினர்.

முத்துப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-30 09:17 GMT   |   Update On 2023-03-30 09:17 GMT
  • முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • அரசு அனுமதியின்றி பழமையான கட்டங்களை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட பொருளாளர் வெற்றி தலைமை வகித்தார்.

ஒன்றிய பொருளாளர் விடுதலை பாண்டி, ஒன்றிய துணை செயலாளர்கள் மாரிமுத்து, அம்பை முருகேஷ், ராஜவர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர்செல்வன், ஒன்றிய செயலாளர் துரை.ஈழராஜா, நகரச் செயலாளர் குணா.கண்ணதாசன் ஆகியோர் பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், கடந்த ஆட்சியின்போது மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம், கழிவறை கட்டும் திட்டம், உறிஞ்சிக் குழாய் அமைக்கும் திட்டம் ஆகியவற்றில் நடந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீதும், பழமையான அரசு கட்டிடங்களை அனுமதி இன்றி இடித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News