உள்ளூர் செய்திகள்

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2022-08-18 10:09 GMT   |   Update On 2022-08-18 10:09 GMT
  • லாட்டரி சீட்டு விற்றதாக பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாபு (வயது48) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
  • கைதான அவரிடம் இருந்து 24 லாட்டரி சீட்டும், 1700 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பனகல்தெரு பகுதியில் லாட்டரி சீட்டு விற்றதாக பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாபு (வயது48) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதான அவரிடம் இருந்து 24 லாட்டரி சீட்டும், 1700 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News