உள்ளூர் செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

Published On 2022-07-24 09:09 GMT   |   Update On 2022-07-24 09:09 GMT
  • வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மதுரை

செல்லூர் மணவாளநகர் ஜீவானந்தம் தெருவை சேர்ந்த ரவி மகன் செல்வகுமார் (23). இவர் நேற்று தத்தனேரி களத்துப் பொட்டல் காமராஜர் தெருவில் நடந்து சென்றார். அங்கு வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.1200-ஐ பறித்து தப்பினார். இது குறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்தாஸ்புரம், பிள்ளையார் கோவில் தெரு கணேசன் மகன் வினோத்குமார் (22) என்பவரை கைது செய்தனர்.

பழங்காநத்தம் பசும்பொன் நகர் நீலகண்டன் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (47). இவர் நேற்று சுந்தரராஜபுரம் அம்மா மெஸ் அருகில் நடந்து சென்றார். அப்போது சோலை அழகுபுரம், பகவதி அம்மன் கோவில் தெரு, மணிகண்டன் என்ற புழுக்கை மணி (36) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.300-ஐ பறித்து தப்பினார். இது குறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்ரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து புழுக்கை மணியை கைது செய்தனர்.

Tags:    

Similar News