உள்ளூர் செய்திகள் (District)

கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது

Published On 2022-08-27 05:40 GMT   |   Update On 2022-08-27 05:40 GMT
  • கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உசிலம்பட்டி

மதுரை மாவட்டத்தில் போதைப்பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தனிப்பிரிவு போலீசார் இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படு ம்படியாக வந்த 3 பேரை நிறுத்தி சோதனை செய்த னர். இதில் அவர்கள் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வகுரணி கணவாய்பட்டியைச் சேர்ந்த பாண்டிச்செல்வம் (வயது38), ராம்குமார் (21), காளப்பன்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீராம் (18) ஆகிய 3 பேர் பிடிபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து 2 கிலோ கஞ்சா, அவர்கள் வந்த 2 இருசக்கர வாகனங்கள், அவர்கள் வைத்திருந்த 3 செல்போன்கள் மற்றும் ரூ.1475 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்கள் உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News