உள்ளூர் செய்திகள் (District)

கிணற்றில் மூழ்கிக்கிடக்கும் கார்.

கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து

Published On 2023-04-18 08:55 GMT   |   Update On 2023-04-18 08:55 GMT
  • கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
  • பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்

தென்காசியில் உள்ள மார்க்கெட் வீதியைச் சேர்ந்தவர் ஜெரால்டு (வயது 52). இவர் செங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சொந்த வேலை காரணமாக கோவைக்கு சென்றிருந்த ஜெரால்டு இன்று காலை காரில் ஊருக்கு புறப்பட்டார்.

மதியம் மதுரை மாவட்டம், பேரையூர் சின்ன பூலாம்பட்டி அருகே வந்தபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையோரம் இருந்த திறந்த வெளி கிணற்றுக்குள் தலை குப்புற கவிழ்ந்து விழுந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக கிணற்றில் குதித்து கண்ணாடியை உடைத்து காருக்குள் சிக்கிய ஜெரால்டை மீட்டனர்.

கிணற்றில் மூழ்கிக்கிடக்கும் கார்.

தொடர்ந்து அங்கு வந்த வந்த கல்லுப்பட்டி தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி காரை மீட்டனர். விபத்தில் காய மடைந்த ஜெரால்டு பேரையூர் அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்றார். விபத்து குறித்து பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News