உள்ளூர் செய்திகள்

9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை

Published On 2023-01-30 06:58 GMT   |   Update On 2023-01-30 06:58 GMT
  • அவனியாபுரத்தில் 9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • மாணவி தற்கொலை குறித்து வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை அவனியாபுரம் எம்.எம்.சி. காலனி ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் வழி விட்டான். இவரது மனைவி மீனாம்பாள். இவரது மகள் மீனாட்சி (வயது 14). இவர் அங்கு உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

மீனாட்சிக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்று கூறப்படுகிறது. இருந்த போதிலும் அவரை பெற்றோர் படிக்கச் சொல்லி கட்டாயப்படு த்தியதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த மீனாட்சி தனது உட லில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி மாணவி மீனாட்சி பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவி தற்கொலை குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அவனியாபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News