- போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியை போலீஸ் அதிகாரி தொடங்கி வைத்தார்.
- இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை
தமிழகம் முழுவதும் கடந்த 11-ந் தேதி முதல் போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாநகர காவல்துறை மற்றும் மாவட்ட மருந்தக உரிமையாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமுக்கம் மைதானத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை மாநகர போலீஸ் துணை கமிஷ னர் மோகன்ராஜ் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். கோரிப்பாளையம் சிக்னல், அரசு மருத்துவமனை வழியாக கலெக்டர் அலுவலகத்தில் பேரணி நிறைவடைந்தது.
இதில் பங்கேற்றவர்கள் போதைப்பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கோஷம் எழுப்பினர்.
மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குநர் ரவிச்சந்திரன், மாவட்ட மருந்தக விற்பனை சங்க தலைவர் கணேசன், பொதுச் செயலாளர் சரவணன், நிர்வாக செயலாளர் பிச்சைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.