- ஜெனகை மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடந்தது.
- கடந்த ஜூன் 6-ந்தேதி கொடியெற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் இந்து சமய அறநிலைய துறை கட்டுபாட்டின் கீழ் உள்ள ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த ஜூன் 6-ந்தேதி கொடியெற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் சோழவந்தான் சங்ககோட்டை பகுதியில் உள்ள மந்தைதிடலில் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், குழந்தைகளை தோளில் சுமந்தபடியும், பெண்கள் தீசட்டியை கையில் ஏந்தியபடியும், திருநங்கைகள் உள்பட பலர் வரிசையாக பூக்குழி இறங்கினர்.
இதற்கான ஏற்பாடு களைகோவில் செயல் அலுவலர் இளமதி தலைமையில் கோவில் பணியாளர்களும், சுகாதார பணியினை பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன் தலைமையில் பணியாளர்களும்.பாதுகாப்பு பணி ஏற்பாடுகளை சோழவந்தான் போலீஸ்இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசாரும், தீயணைப்புத் துறை நிலைய அதிகாரி பசும்பொன் தலைமையில் செய்திருந்தார்கள்.