உள்ளூர் செய்திகள்

எழுது பலகை 

மாணவர்களுக்கு இலவச எழுது பலகை

Published On 2022-06-11 11:09 GMT   |   Update On 2022-06-11 11:09 GMT
  • வாடிப்பட்டியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச எழுது பலகை வழங்கப்பட்டது.
  • கருணை உள்ளங்கள் பவுண்டேசன் சார்பில் நடந்தது.

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வட்டார வளமைய அலுவலக வளாகத்தில் வாடிப்பட்டி வட்டார அளவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க, ஆரம்பப்பள்ளிகள், அரசுஉதவி பெறும் பள்ளிகளில் முதல்வகுப்பு பயில உள்ள மாணவ-மாணவிகள் 1000 பேருக்கு கருணை உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக இலவச எழுது பலகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

வட்டாரகல்வி அலுவலர்கள் ஷாஜகான், அகிலத்து இளவரசி ஆகியோர் தலைமை தாங்கி எழுதுபலகைகளை வழங்கினர். வட்டார வளமைய (பொறுப்பு)மேற்பார்வையாளர் கலைச்செல்வி. ஆசிரியர் ஜோயல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஆசீர்வாதம் பீட்டர் வரவேற்றார். இதில் வாடிப்பட்டி வட்டார அளவிலான அரசுபள்ளி 1-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இலவச எழுது பலகை வழங்கப்பட்டது. இதில் கருணை உள்ளபவுண்டேசன் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியர் ஆர்த்தி நன்றிகூறினார்.

Tags:    

Similar News