உள்ளூர் செய்திகள்

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்

Published On 2023-05-29 08:40 GMT   |   Update On 2023-05-29 08:40 GMT
  • ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
  • ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையினர் வலியுறுத்தினர்.

மதுரை

திருப்பரங்குன்றத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் சமீபத்தில் உயிரிழந்த பேரவையின் தலைவர் ஜி.ஆர். ஜெயகார்த்தியின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரது திருவுருவப் படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கூட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடை இல்லை என அறிவித்த உச்சநீதிமன்றத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு உரிமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் போது வருவாய் துறையினர்கள் மாடு வளர்ப்பவர்கள், மாடுபிடி வீரர்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்ளக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையின் புதிய தலைவராக ராமமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். நிர்வாகிகள் பிரகாஷ், மணி, மார்க்கெட் ராமமூர்த்தி, கோபால், சோனைமுத்து உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Tags:    

Similar News