உள்ளூர் செய்திகள்

மதுரை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் குறைதீர்க்கும் முகாம்

Published On 2022-07-25 06:58 GMT   |   Update On 2022-07-25 06:58 GMT
  • மதுரை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
  • மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

மதுரை

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

அதன்படி நாளை (26-ந்தேதி) மேலமாரட் வீதியில் உள்ள மதுரை மாநகராட்சி மத்திய மண்டல-3 அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

இதில் மத்திய மண்டலம்- 3 பகுதிக்கு உட்பட்ட தமிழ்ச்சங்கம் ரோடு, கிருஷ்ணன்கோவில் தெரு, ஜடாமுனி கோவில் தெரு, காஜிமார் தெரு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஞானஒளிவுபுரம், ஆரப்பாளையம், மேலப்பொன்னகரம், ரெயில்வே காலனி, எல்லீஸ் நகர், எஸ்.எஸ்.காலனி, அரசரடி, விராட்டிபத்து, பொன்மேனி, சொக்கலிங்கநகர், துரைசாமி நகர், சுந்தரராஜபுரம், மேலவாசல், சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம். என மாநகராட்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News