உள்ளூர் செய்திகள்

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

Published On 2023-01-21 08:19 GMT   |   Update On 2023-01-21 08:19 GMT
  • எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்றார்.
  • ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சோழவந்தான்

சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்குட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவைத்தலைவர் முனியாண்டி, ஒன்றிய பொருளாளர் தங்கப்பாண்டி ஆகியோர் வரவேற்றனர்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட பொருளாளர் திருப்பதி, டாக்டர் சரவணன், எம்.ஜி.ஆர். ஒன்றிய இளைஞரணி தண்டபாணி, நகர இளைஞரணி கேபிள் மணி, மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் சிவா ஆகியோர் பேசினர். இதில் ஒன்றிய தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மேற்கு ஒன்றிய கவுன்சிலர் அரியூர் ராதாகிருஷ்ணன், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக்குமார் உள்பட மாவட்ட, ஒன்றிய, நக,ர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மருத்துவர் அணி டாக்டர் கருப்பையா நன்றி கூறினார்.

Tags:    

Similar News