- எஸ்.என்.கல்லூரியில் என்.எஸ்.எஸ்.முகாம் நடந்தது.
- விஜயகுமார் வரவேற்று பேசினார்.
மதுரை,
மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக ஏழு நாள் சிறப்பு முகாம் வலையங்குளம், குசவன்குண்டு மற்றும் சோளங்குருணி கிராமங்களில் நடைபெற்றது.
முகாமின் தொடக்க விழாவில் திட்ட அலுவலர் விஜயகுமார் வரவேற்று பேசினார். முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார்.
வலையங்குளம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தனசேகரன், சித்த மருத்துவர் லதா ராணி, சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி, ரூட்செட் மைய இயக்குநர் சுந்தராச்சாரி, ஒருங்கிணைப்பாளர் கோகிலா, விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் கோபிநாத் பேசினர்.
நிறைவு விழாவில் திருமங்கலம் டி.எஸ்.பி. வசந்தகுமார் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் கண்ணன், கல்லூரியின் சுயநிதிப்பிரிவு இயக்குநர் ஜெயக்கொடி கலந்து கொண்டனர்.
மாணவர்கள் கிராமங்களில் உள்ள ஊரணிகளை சுத்தம் செய்து பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தனர். திட்ட அலுவலர்கள் ராமகிருஷ்ணன், இருளப்பன் முகாமிற்குரிய ஏற்பாடுகளை செய்தனர்.