உள்ளூர் செய்திகள்

பிளஸ்-1 மாணவர் தற்கொலை

Published On 2022-07-19 09:16 GMT   |   Update On 2022-07-19 09:16 GMT
  • பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
  • தந்தை செல்வகுமார் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் கொடுத்தார்.

மதுரை

மதுரை ஜெய்ஹிந்த்புரம், சொக்க கொத்தன்குளத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் அந்த பகுதியில் கார்மெண்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் கவுதம்குமார் (வயது 17). இவர் அங்கு உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

கவுதம்குமார் சரியாக படிக்காமல் அடிக்கடி செல்போனை உபயோகித்து வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இருந்தபோதிலும் அவர் கேட்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு கவுதம்குமாரிடம் இருந்த செல்போனை பெற்றோர் வாங்கி வைத்துக்கொண்டனர். இதனால் விரக்தியடைந்த கவுதம்குமார் கடந்த சில நாட்களாக யாருடனும் பேசாமல் இருந்தார்.

இந்தநிலையில் அவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவுதம்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது தந்தை செல்வகுமார் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News