உள்ளூர் செய்திகள் (District)

பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-07-12 08:43 GMT   |   Update On 2022-07-12 08:43 GMT
  • பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஊர்சேரி மஞ்சமலை கோவி ல்தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மகள் யாசினி (வயது 16). இவர் அலங்காநல்லூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

10-ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த நிலையில் யாசினி தற்போது படிப்பில் கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த யாசினி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News