உள்ளூர் செய்திகள் (District)
அதிக புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு போலீசார் அபராதம்
- அதிக புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
- சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரை
மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையில் போலீசார் போக்குவரத்து வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர்.
அளவுக்கு மீறி அதிக அளவில் கரும்புகையை வெளியேற்றி காற்று மாசை ஏற்படுத்தும் வாகனங்கள், அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்கள் பொருத்திய வாகனங்களை போலீசார் கைப்பற்றினர். சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வாகனங்களுக்கு புதிய புகை பரிசோதனை சான்றிதழ் பெறப்பட்டது. அதன்பிறகு வாகன ஓட்டிகள் "சுற்றுப்புறசூழலை பாதுகாப்போம்" என்று போலீசார் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.