உள்ளூர் செய்திகள் (District)

நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

Published On 2022-09-30 06:57 GMT   |   Update On 2022-09-30 06:57 GMT
  • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
  • வாடிப்பட்டி துணைமின் நிலையத்தில் உள்ள தெத்தூர் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

மதுரை

சமயநல்லூர் துணைமின் நிலையத்தில் உள்ள பெப்சி பீடர் மற்றும் வாடிப்பட்டி துணைமின் நிலையத்தில் உள்ள தெத்தூர் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (1-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை பரவை, பேங்க் காலனி, ஆகாஷ் கிளப், சரவணா நகர், சந்தோஷ் நகர், வித்யாவாகினி அபார்ட்மெண்ட், எல்லையூர், ராமராஜபுரம், கூலாண்டிப்பட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பன்கோட்டை, சமத்துவபுரம், தடாகநாச்சிபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

இதேபோன்று மதுரை அரசரடி துணைமின் நிலையத்தில் உள்ள கூடல் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (1-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கொன்னவாயன் சாலை, சிங்கம்பிடாரி கோவில் தெரு, இந்திரா நகர், மேல மற்றும் கீழ வைத்தியநாதபுரம், மருதுபாண்டியர் தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

Tags:    

Similar News