உள்ளூர் செய்திகள் (District)

ஜெய்ஹிந்த்புரத்தில் இன்று பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.




ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2022-08-08 09:46 GMT   |   Update On 2022-08-08 09:46 GMT
  • ஜெய்ஹிந்த்புரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை ஜெய்ஹிந்த்புரம் புதிய போலீஸ் நிலையம் அருகே திரண்டு வந்தனர்.

மதுரை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் அரசுக்கு சொந்தமான பல்வேறு பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பொதுமக்கள் அத்துமீறி வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

ஜெய்ஹிந்த்புரத்தில் அத்துமீறிய ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள், அரசிடம் பல மாதங்களாக கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் மதுரை எம்.கே.புரம் பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை ஜெய்ஹிந்த்புரம் புதிய போலீஸ் நிலையம் அருகே திரண்டு வந்தனர். அவர்கள் சாலையின் நடுவே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஜெய்ஹிந்த்புரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News