உள்ளூர் செய்திகள்

குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழைநீர்.

குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதி

Published On 2023-02-05 08:15 GMT   |   Update On 2023-02-05 08:15 GMT
  • திருமங்கலம் அருகே குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதிப்பட்டுள்ளனர்.
  • மழைநீரை அப்புறப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருமங்கலம்

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உச்சப்பட்டி கிராமத்தில் சிவன் நகர், இந்திராநகர் பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளது. இப்பகுதி விரிவாக்க பகுதி என்பதால் கடந்த சில ஆண்டுகளாக சாலைகள் அமைத்து தராமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் உச்சப்பட்டி கண்மாயில் தண்ணீர் நிரம்பியதால் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் சூழ்வது வழக்கமாக உள்ளது.

ஆண்டுக்கு ஒரு முறை இப்பகுதியில் மழை வெள்ளம் புகுந்து குடியிருப்பு வாசிகள் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 4 மாதமாக தண்ணீர் வற்றாததால் இப்பகுதி மக்கள் தொற்று நோயால் பாதிக்கப்படுவதாகவும், விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் நுழைவதாகவும் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக பலமுறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.

மழைநீரை அப்புறப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News