உள்ளூர் செய்திகள்

கத்திமுனையில் வழிப்பறி: 5 பேர் கைது

Published On 2022-09-07 08:22 GMT   |   Update On 2022-09-07 08:22 GMT
  • கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை பறித்து சென்று விட்டனர்.

மதுரை

மதுரை கே.புதூர் கணபதி கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது49). இவர் தல்லா குளம் பெருமாள் கோவில் பின்புறம் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 5 பேர் கும்பல் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை பறித்து சென்று விட்டனர்.

இது குறித்து கிருஷ்ண மூர்த்தி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கருப்பாயூரணி ஒத்த வீடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற மார்க்கண்டேயன் (30), செல்லூர் சத்தியமூர்த்தி நகர் 7-வது தெருவை சேர்ந்த மணிகண்டன் (22), செல்லூர் சத்தியமூர்த்தி நகர் 5-வது தெருவை சேர்ந்த செல்வகுமார் (22), மீனாட்சிபுரம் சங்கர் லைன் 2-வது தெருவை சேர்ந்த மணிகண்டன் என்ற பிள்ளையார் (25), மீனாம்பாள்புரம் 5-வது தெரு மருதுபாண்டியன் நகரை சேர்ந்த விஜய் என்ற ஜின்கிளி (24) ஆகியோரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News