உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

Published On 2022-09-22 09:39 GMT   |   Update On 2022-09-22 09:39 GMT
  • மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.
  • தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

மதுரை

அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ மற்றும் அலிம்கோ நிறுவனம் மூலமாக உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் 12-ந் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

அதன்படி வருகிற 24-ந் தேதி நரிமேட்டில் உள்ள ஓ.சி.பி.எம்.பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 25-ந் தேதி பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியிலும், 26-ந் தேதி பழங்காநத்தம் டி.வி.எஸ்.மெட்ரிகுலேசன் பள்ளியிலும் முகாம் நடக்கிறது. 27-ந் தேதி வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியிலும், 28-ந் தேதி கொட்டாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியிலும், 29-ந் தேதி ஒத்தக்கடை உலகனேரி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியிலும் முகாம் நடக்கிறது. 30-ந் தேதி திருப்பாலை யாதவா கல்லூரியிலும், அக்டோபர் 1-ந் தேதி பாத்திமா கல்லூரியிலும், 6-ந் தேதி தியாகராஜர் கல்லூரியிலும், 7-ந் தேதி திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியிலும், 8-ந் தேதி மேலூர் அரசு கல்லூரியிலும் முகாம் நடக்கிறது.

10-ந் தேதி பேரையூர் அரசு மேல்நிலைபள்ளியிலும், 11-ந் தேதி உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியிலும், 12-ந் தேதி திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைபள்ளியிலும் முகாம்கள் நடக்கிறது.

இதில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்களுக்கு தேவையான உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News