உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

Published On 2022-10-11 07:46 GMT   |   Update On 2022-10-11 07:46 GMT
  • பசுமலையில், நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடக்கிறது.
  • கடந்த 24-ந் தேதி முதல் வருகிற 12-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.

மதுரை

அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ மற்றும் அலிம்கோ நிறுவனம் மூலமாக உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் கடந்த 24-ந் தேதி முதல் வருகிற 12-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. நாளை (12-ந் தேதி) திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக இந்த முகாம் பசுமலையில் உள்ள திருமலை மன்னர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது. இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறும். இதில் மாற்றுத்திறன் கொண்ட நபர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு அரசின் திட்டங்களைப் பெற்று பயனடையலாம். மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News