உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

Published On 2023-06-07 08:34 GMT   |   Update On 2023-06-07 08:34 GMT
  • மதுரை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை விராட்டிபத்து கிருதுமால் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ராஜா (வயது21). இவருக்கு நிரந்தர வேலை இல்லாமல் இருந்து வந்தார். அவரை வேலைக்கு செல்லும்படி அவருடைய தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமடைந்த ராஜா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை சுப்பிரமணியன் எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News