உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-06-03 08:19 GMT   |   Update On 2023-06-03 08:19 GMT
  • வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
  • இன்ஸ்பெக்டர் குபேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சோழவந்தான்

சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைபாண்டி. இவரது மகன் நாகபாண்டி (வயது 21). இவர் நகரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நாகபாண்டி அடிக்கடி செல்போன் பயன்படுத்தியதை குடும்பத்தினர் கண்டித்தனர். இதில்விரக்தி அடைந்த நாகபாண்டி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காடுப்பட்டி சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News