உள்ளூர் செய்திகள் (District)

விபத்தில் வாலிபர் பலி

Published On 2022-09-11 08:43 GMT   |   Update On 2022-09-11 08:43 GMT
  • விபத்தில் வாலிபர் பலியானார்.
  • மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த லட்சுமணன் படுகாயம் அடைந்தார்.

மதுரை

சிவகங்கை மாவட்டம் கரிசல்குளத்தை சேர்ந்தவர் முத்தையா (வயது 33). இவருக்கு பஞ்சா என்ற மனைவியும், தங்கப்பாண்டி, பாண்டீஸ்வரி என்ற குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் முத்தையா பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக தனது நண்பர் லட்சுமணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

அவர்கள் சின்ன உடைப்பு பகுதியில் சென்றபோது வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த முத்தையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த லட்சுமணன் படுகாயம் அடைந்தார்.

அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News