உள்ளூர் செய்திகள் (District)
- அலங்காநல்லூர் அருகே விநாயகர், முத்தாலம்மன் உள்ளிட்ட கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாமை, கிராம கரைகாரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அருகே உள்ள எர்ரம்பட்டியில் விநாயகர், முத்தாலம்மன், காளியம்மன், அய்யனார், அம்மச்சி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கும்பாபிஷேக விழா நடந்தது. 4 கால யாக பூஜையுடன் கணபதி, மஹா சுதர்சன ஹோமம், விநாயகர், மஹாலட்சுமி, கோ பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி புனித தலங்களில் இருந்து கொண்டு கொண்டுவரப்பட்ட நீர் கோவிலை வலம் வந்தது. பின்னர் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாமை, கிராம கரைகாரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.