உள்ளூர் செய்திகள் (District)
- பிணமாக கிடந்த முதியவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
- திடீர் நகர் போலீசார் முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை
மதுரை டவுன் டி.பி.கே.ரோடு அமெரிக்கன் மிஷன் சர்ச் தெரு பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் மதுரை திடீர் நகர் போலீசார் முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது முன்னங்கையில் சின்ன மருது, பெரிய மருது, அகமுடையார் என்ற எழுத்து பச்சை குத்தப்பட்டுள்ளது. அவர் யார்? என்பது தெரியவில்லை. அவர் பற்றி தகவல் தெரிந்தவர்கள் போலீஸ் நிலையத்தில் தங்களை பற்றி தெரிவித்து அவரது உடலை பெற்று செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.