உள்ளூர் செய்திகள் (District)

ஆயிரம் கண்ணுடையாள் மகாசக்தி பீடம் கும்பாபிஷேக விழா

Published On 2023-02-07 08:07 GMT   |   Update On 2023-02-07 08:07 GMT
  • திருமங்கலம் அருகே ஆயிரம் கண்ணுடையாள் மகாசக்தி பீடம் கும்பாபிஷேக விழா நடந்தது.
  • கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருமங்கலம்

திதிருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டியில் ஆயிரம் கண்ணுடையாள் மகா சக்தி பீடம் உள்ளது. இந்த கோவிலில் ஆயிரம் கண்ணுடையாள்,மகாவராஹி தேவி, பஞ்சமுக பிரத்தியங்கிராதேவி, மகா மிருத்யுஞ்யேஸ்வரராகிய மகா சக்தி பீடத்தில் அமைந்துள்ள ஆயிரம் கண்ணுடையாள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பவுர்ணமி திதியும், பூச நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய தினத்தில் விக்னேசுவர பூஜை, 2-ம் கால யாக பூஜை, கோ பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடாகிஆயிரம் கண்ணுடையாள் கோபுர கலசத்திற்கு வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது.

இதில் மதுரை, விருதுநகர், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மாலையில் ஆயிரம் கண்ணுடையாள் மகாசக்தி மாரியம்மன்-சிவபெருமானுக்கு திருக்கல்யாண வைபோகம் நடந்தது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News