உள்ளூர் செய்திகள் (District)

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் மலையேறி சென்ற காட்சி.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Published On 2023-08-16 08:07 GMT   |   Update On 2023-08-16 08:07 GMT
  • சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
  • 60 சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்து அனைத்து பகுதிகளும் கண்காணிக்கப் பட்டு வருகிறது.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் சாப்டூர் சதுரகிரி சுந்தரமகா லிங்கம் சுவாமி தரிசனம் செய்ய தாணிப்பாறை அடி வாரத்தில் இருந்து பக்தர்கள் மலையேறி வருகின்றனர். பேரையூர் அடுத்த சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள் ளது சதுரகிரி சுந்தரமகாலிங் கம் திருக்கோவில்.

18 சித்தர்கள் வந்து தரிச னம் செய்த இம்மலையில் தற்போது வரையில் இங்கே சித்தர்கள் உலாவி வருகின் றனர். ஒவ்வொரு தமிழ் மாதமும் பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை, பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுவர்.

இந்நிலையில் ஆடி அமா வாசை தினமான இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் தாணிப்பறை அடிவாரம் வழியாக அரசின் வழிகாட்டு நெறிமுறை மற்றும் கடுமையான சோத னைகளுக்கு உட்படுத்தப் பட்டு மலையேற அனுமதிக் கப்பட்டு வருகின்றனர். வழக்கமாக ஆடி அமாவாசை தினத்தன்று அதிகம் கூட்டம் இருக்கும் என்பதால் 2,000 போலீசார், 50-க்கும் மேற் பட்ட நக்சல் தடுப்பு பிரிவு பிரிவினர் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர்.

60 சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்து அனைத்து பகுதிகளும் கண்காணிக்கப் பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இருமுறை மலையில் தீ விபத்து ஏற்பட் டதால் பக்தர்கள் கடுமை யான சோதனைக்கு பின் னரே மலைக்கு அனும–திக் கப்பட்டு வருகிறனர். குறிப் பாக எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை மேலே கொண்டு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

மேலும் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீர் நிலைகளில் குளிக்கவும் அனுமதி கிடையாது. முன்ன–தாக நேற்று பிற்பகலை அமாவாசை காலம் தொடங் கிய காரணத்தினா–லும் நேற்று விடுமுறை தினத்தா லும் பக்தர்கள் நேற்று முதலே மலையேறி சுந்தர மாலிங்கம் சுவாமியை தரி சனம் செய்து வருவதால் இன்று எதிர்பார்க்கப்பட்ட கூட்டத்தை விட சற்று குறை வாகவே காணப்பட்டது.

இந்த ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை தினம் வந்ததால் கூட்டம் பெருவா ரியாக பிரிந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது. பிற்பகல் 12 வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனும திக்கப்படுவர். ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி நாட் களில் நாளை கடைசி தினம் என்பதால் நாளையும் பக்தர் கள் வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News