உள்ளூர் செய்திகள்

சிலை எடுப்பு திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Published On 2022-10-13 08:52 GMT   |   Update On 2022-10-13 08:52 GMT
  • திருமங்கலம் அருகே சிலை எடுப்பு திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
  • வாகைகுளம் கிராமத்தில் அமைந்துள்ள அய்யனார் கருப்பசாமி கோவில் புரட்டாசி பொங்கல் விழா மிகவும் பிரசிதிபெற்றது.

திருமங்கலம்

திருமங்கலம் அருகே வாகைகுளம் கிராமத்தில் அமைந்துள்ள அய்யனார் கருப்பசாமி கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் சிலை எடுப்பு திருவிழா பிரசிதிபெற்றது .

பக்தர்கள் தங்களது கஷ்டம் தீர அய்யனார், கருப்ப சாமியை நேர்த்தி கடனாக சிலை செய்வதாக வேண்டி கொண்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம் அரசு பணி வேண்டும் என்றால் அரசுஊழியர், காவல்துறை ஊழியர், ராணுவவீரர் போன்ற சிலைகளும், விவசாயம் செழிக்கவேண்டினால் டிராக்டர், காளைமாடு சிலைகளும், விஷபூச்சிகள் தீண்டாமல் இருக்க நாகர்சிலை உள்ளிட்ட சிலைகளும் நேர்த்திகடனாக செய்வதாக வேண்டி கொள்வர்.

இந்த ஆண்டிற்கான சிலை எடுப்பு திருவிழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி மாலை 3 மணியளவில் சிலைசெய்யும் வீடுகளிலிருந்து பக்தர்கள்ஆயிரக்கணக்கில் திரண்டு தாங்கள் வேண்டிக் கொண்ட சிலைகளை தலைசுமையாக ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர். வாண வேடிக்கைகள் வெடிக்க வும், மேளதாளங்கள் முழங்கவும் சிலை எடுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

குறிப்பாக ஆசிரியர், ராணுவவீரர், அரசியல் தலைவர், டிராக்டர், ஆடு, மாடு சிலைகள், கருப்பணசாமி, அய்யனார் சாமிசிலைகள் உள்ளிட்ட பல்வேறு சிலைகளை தலையில் ஏந்தியபடியே ஊர்வலமாகவந்து வயல்வெளிகளை கடந்து கண்மாய் கரையில் உள்ள கோயிலை அடைந்து தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர்.

இந்த சிலை எடுப்பு திருவிழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கம்பம், திருச்சி, உசிலம்பட்டி, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News