உள்ளூர் செய்திகள் (District)

சிறப்பு அலங்காரத்தில் தெய்வானையுடன் முருகன்.

திருப்பரங்குன்றம் முருகன்- தெய்வானையுடன் வீதி உலா

Published On 2022-07-23 09:45 GMT   |   Update On 2022-07-23 09:45 GMT
  • திருப்பரங்குன்றம் முருகன்- தெய்வானையுடன் வீதி உலா நடந்தது.
  • இரவு திருப்பரங்குன்றம் பெரியரத வீதி, கீழ ரத வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திர நாளில் தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான், தெய்வானையோடு எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம்.

இதில் ஆடி மாதம் வரும் கார்த்திகை விமர்சையாக கொண்டாடப்படும். இன்று ஆடி கார்த்திகையை முன்னிட்டு காலையில் உற்சவர் சன்னதியில் முருகப்பெருமான் தெய்வா னைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சன்னதி தெருவில் உள்ள ஆடி கார்த்திகை மண்டபத்தில் முருகப்பெருமான் தெய்வானையோடு எழுந்தருளினார். அங்கு இருக்கும் சுவாமி மாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றதும் சிறப்பு அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்வார்.

தொடர்ந்து இரவு திருப்பரங்குன்றம் பெரியரத வீதி, கீழ ரத வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

Tags:    

Similar News