உள்ளூர் செய்திகள்

நாளை காமராஜர் பிறந்தநாள் விழா

Published On 2023-07-14 09:28 GMT   |   Update On 2023-07-14 09:28 GMT
  • நாடார் உறவின்முறை மகளிர் பள்ளியில் நாளை காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
  • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக–ளுக்கு பள்ளி தலைவர் எஸ்.எம்.பிச்சை பாண்டியன் பரிசுகள் வழங்கி பேசுகிறார்.

மதுரை

மதுரை கீரைத்துறை மேலதோப்புத்தெருவில் அமைந்துள்ள மதுரை அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் பெருந்த–லைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா நாளை கல்வி வளர்ச்சி நாளாக நடைபெறுகிறது.

பள்ளியின் செல்வி விளையாட்டு மைதானத்தில் நடை பெறும் விழாவில் மதுரை பட்டிமன்ற தென்றல் மதுரை ஜோதிகாராஜன் கலந்துகொண்டு மக்கள் மனம் கவர்ந்த நாயகன் என்ற தலைப்பில் சிறப்புரை–யாற்றுகிறார்.

மேலும் விழாவை–யொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக–ளுக்கு பள்ளி தலைவர் எஸ்.எம்.பிச்சை பாண்டியன் பரிசுகள் வழங்கி பேசுகிறார்.

விழாவுக்கான ஏற்பாடு–களை தலைவர் எஸ்.எம்.பிச்சை பாண்டியன், துணைத் தலைவர்கள் ஜெ.ஜெயசிங், ஏ.ராஜா ராம், செயலாளர் வி.என்.சிவக் குமார், பொருளாளர் ஜெ.தாமரை செல்வன், தலைமை யாசிரியை டி.சரஸ் வதி ஆகியோர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News