உள்ளூர் செய்திகள்

வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-09-01 07:57 GMT   |   Update On 2022-09-01 07:57 GMT
  • மதுரை அருகே வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

மதுரை

மதுரை சமயநல்லூர், வளர்நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). இவரது மனைவி பாண்டியம்மாள். கணேசன் அதே பகுதியில் மட்டன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கணேசன், நேற்று மதியம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததனர், மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News