உள்ளூர் செய்திகள்

காளைகள் முட்டியதில் படுகாயமடைந்த வீரர்கள் உள்பட 12 பேருக்கு சிகிச்சை

Published On 2023-01-17 08:50 GMT   |   Update On 2023-01-17 08:50 GMT
  • மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் படுகாயமடைந்த வீரர்கள் உள்பட 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி யில் மாடுபிடி வீரர்கள் உள்பட 31 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரை

பொங்கல் பண்டி கையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த 15-ந்தேதி அவனியாபுரத்திலும் ,நேற்று (16 -ந் தேதி)பாலமேட்டிலும் நடந்தன.

இன்று (17-தேதி)அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி யில் மாடுபிடி வீரர்கள் உள்பட 31 பேர் படுகாயம் அடைந்தனர். பாலமேட்டில் நடந்த போட்டியில் 23 காளைகளை அடக்கி மதுரையை சேர்ந்த மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன் முதலிடம் பெற்றார்.

அவர் காளைகள் முட்டி யதில் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார். அவரதுகுடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்ற கருப்பையா (வயது 24) ராமசாமி(33), ராமச்சந்திரன் (22), திரு மலை சீனிவாசன், அபி லாஷ் (21), சிவராஜ்(25), பெருமாள்(27), பிரபு(20), சங்கர்(16), பழனி(37) உள்பட 12 பேர் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாடுபிடி வீரர்கள் உட்பட படுகாயம் அடைந்த 12 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags:    

Similar News