- எஸ்.என்.கல்லூரியில் யோகா பயிற்சி முகாம் நடந்தது.
- நூலகர் கமார் தியான பயிற்சியின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.
மதுரை
மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி யோகா ஆராய்ச்சி மையம் சார்பில் முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கான ஒரு வார கால "தலைமைப்பண்புகள் மற்றும் தியான பயிற்சி" நடந்தது. முதல்வர் கண்ணன் தியான பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.
அமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் உதவி பேராசிரியர் தனலட்சுமி தலைமை தாங்கினார். நூலகர் கமார் தியான பயிற்சியின் நோக்கத்தை எடுத்துரைத்தார். மதுரை ராமச்சந்திரா மிஷனைச் சேர்ந்த "இதய நிறைவு" பயிற்றுநர்கள் ராஜகோபால், லோகநாதன், சோமசுந்தரம், சாந்தி, தங்கம் வான்மலர் ஆகியோர் மாணவர்களுக்கு பல்வேறு தியான பயிற்சிகளை செயல்முறை விளக்க த்துடன் எடுத்துரைத்தனர்.
இணைவு, மையக்கரு, சூழல், தெரிவுகள், காரணவியல், சமூகம் என்ற தலைப்புகளில் தலைமைப்பயிற்சி வழங்கப்பட்டது. மாண வர்களுக்கு உரையாற்று வதன் மூலமும், விளையா ட்டின் மூலமும், இணைய தளத்தை பயன்படுத்தியும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
தினமும் இதயத்தை கவனிக்கும் இதய நிறைவு தியானப்பயிற்சியும் வழங்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர் சிவராம் நன்றி கூறினார்.