உள்ளூர் செய்திகள் (District)
கிருஷ்ணகிரி பழைய பஸ் ஸ்டாண்டில் ஆண் பிணம்
- ஸ்டாண்ட் பகுதியில் 40 வயது ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
- இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பழைய பஸ் நிலைய பகுதி கிராம நிர்வாக அதிகாரி சரவணன் என்பவர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 40 வயது ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று மர்ம நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.